Sundara Kaadam - Ramayanam - சுந்தர காண்டம் - இராமாயணம்
இந்தப் பதிவு - தினமும் 5 நிமிடத்தில் படிப்பதற்கு உதவும்
சுருக்கப்பட்ட வடிவில் சுந்தர காண்டம்.
"கண்டேன் சீதையை" என்று காகுத்தனிடம்
சொன்ன கருணைமிகு ...
ஸ்ரீராமபக்தன் ஆஞ்சநேயன் பெருமையிது.
புத்திர் பலம் யஸோ தைர்யம்
நிர்ப்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மராணத் பவேத் !!
Content Courtesy: V.S.K. Graphics, No.3 Veerabhadran Street, Nungambakkam, Chennai
இந்தப் பதிவு - தினமும் 5 நிமிடத்தில் படிப்பதற்கு உதவும்
சுருக்கப்பட்ட வடிவில் சுந்தர காண்டம்.
"கண்டேன் சீதையை" என்று காகுத்தனிடம்
சொன்ன கருணைமிகு ...
ஸ்ரீராமபக்தன் ஆஞ்சநேயன் பெருமையிது.
அஞ்சனை தனையன் அலைகடல்
தாண்டவே ஆயத்தமாகி நின்றார்.
தாண்டவே ஆயத்தமாகி நின்றார்.
அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரர்களும்
அன்புடன் விடைகொடுத்து வழி அனுப்பினரே.
அன்புடன் விடைகொடுத்து வழி அனுப்பினரே.
ராம பாணம் போல் ராக்ஷஸர் மனை நோக்கி
ராஜகம்பீரத்துடன் ராமதூதன் சென்றார்.
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் கூடி நின்று பூமாரி பொழிந்தனரே
ராஜகம்பீரத்துடன் ராமதூதன் சென்றார்.
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் கூடி நின்று பூமாரி பொழிந்தனரே
மைந்நாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மாருதியும் அதனைத் திருப்தி செய்து
கரசையை வெற்றிகண்டு
ஸிம்ஹிகயை வதம் செய்து
சாகசமாய்ச் சமுத்திரத்தைத் தாண்டியே
இலங்கை சேர்ந்தார்.
மாருதியும் அதனைத் திருப்தி செய்து
கரசையை வெற்றிகண்டு
ஸிம்ஹிகயை வதம் செய்து
சாகசமாய்ச் சமுத்திரத்தைத் தாண்டியே
இலங்கை சேர்ந்தார்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து அவள்
இதயத்தைக் கலக்கினார்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்கும் இங்கும் தேடியே அசோகவனத்தை அடைந்தார்
இடக்கையால் தண்டித்து அவள்
இதயத்தைக் கலக்கினார்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்கும் இங்கும் தேடியே அசோகவனத்தை அடைந்தார்
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனையே தியானம் செய்யும்
சீதாப்பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினார், மகிழ்ந்தார்,
ஆனால் அவள் நிலை கண்டு கலங்கினார்.
சீதாப்பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினார், மகிழ்ந்தார்,
ஆனால் அவள் நிலை கண்டு கலங்கினார்.
இராவணன் மிரட்டிட ராட்சசிகள் அலட்டிட
வைதேகி கலங்கிட வந்தார்.
வைதேகி கலங்கிட வந்தார்.
துயர்துடைக்கக் கணையாழியைக் கொடுத்து
ஜெயராமன் சரிதம் சொல்லிச்
சூடாமணியைப் பெற்றுக்கொண்டார்.
ஜெயராமன் சரிதம் சொல்லிச்
சூடாமணியைப் பெற்றுக்கொண்டார்.
அன்னையின் கண்ணீர் கண்டு
அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோக வனத்தை அழித்து
அநேகரை ஒழித்திட்டார்.
அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோக வனத்தை அழித்து
அநேகரை ஒழித்திட்டார்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைக்கப்பட்ட மாருதி
பட்டாபிராமன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கை வேந்தன்,
"வையுங்கள் தீ, வாலுக்கு" என்றான்.
பட்டாபிராமன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கை வேந்தன்,
"வையுங்கள் தீ, வாலுக்கு" என்றான்.
வைத்த நெருப்பினால் வெந்தது இலங்கை நகர்.
அரக்கரின் அகந்தையை அழித்திட்ட அனுமனும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவியே வந்தார்.
அரக்கரின் அகந்தையை அழித்திட்ட அனுமனும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவியே வந்தார்.
அன்னையைக் கண்டு விட்ட ஆனந்தத்தில்
மெய் மறந்தார். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த
ராமனிடம் "கண்டேன் சீதையை" என்றார்.
மெய் மறந்தார். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த
ராமனிடம் "கண்டேன் சீதையை" என்றார்.
'சொல்லின் செல்வன்' ஆஞ்சநேயன் சூடாமணியை
அளித்திட்டார். மனம் கனிந்து மாருதியை மார்போடு
அணைத்த ராமன் மைதிலியைச் சிறை மீட்க
மறுகணமே சித்தமானார்.
அளித்திட்டார். மனம் கனிந்து மாருதியை மார்போடு
அணைத்த ராமன் மைதிலியைச் சிறை மீட்க
மறுகணமே சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகள் கட்டிப் படைகள் கூட்டி
அனுமனும் இலக்குவனும் அருகருகே சேர்ந்துவரப் புறப்பட்டார்.
அழித்திட்டார் இராவணனை. ஒழித்திட்டார் அதர்மத்தை.
அன்னை சீதா பிராட்டியைச் சிறைமீட்டு அயோத்தி சென்று
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
அகிலம் புகழ ஆட்சி செய்தார்.
அனுமனும் இலக்குவனும் அருகருகே சேர்ந்துவரப் புறப்பட்டார்.
அழித்திட்டார் இராவணனை. ஒழித்திட்டார் அதர்மத்தை.
அன்னை சீதா பிராட்டியைச் சிறைமீட்டு அயோத்தி சென்று
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
அகிலம் புகழ ஆட்சி செய்தார்.
அவரைச் சரணடைந்தார்க்கு அவர் அருள் என்றும் உண்டு.
எங்கெங்கு ரகுராமன் கீர்த்தனமோ அங்கங்குச் சிரம்
மேல் கரம் குவித்து மனம் கசிந்து கண்கள் நீர் சொரிய
ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே
ஸ்ரீ ஆஞ்சநேயா ! உனைப் பணிகிறேன் பன்முறை !
உனைப் பணிகிறேன் பன்முறை !
மேல் கரம் குவித்து மனம் கசிந்து கண்கள் நீர் சொரிய
ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே
ஸ்ரீ ஆஞ்சநேயா ! உனைப் பணிகிறேன் பன்முறை !
உனைப் பணிகிறேன் பன்முறை !
அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
இருவரும் கவரிபற்ற
பரதன் வெண்குடை கவிக்க
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெய்மன் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுப்ப வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி
அங்கதன் உடைவாள் ஏந்த
இருவரும் கவரிபற்ற
பரதன் வெண்குடை கவிக்க
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெய்மன் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுப்ப வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி
நாடிய பொருளும் கைகூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும்
வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன்
தோள்வலி கூறுவார்க்கே
ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும்
வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன்
தோள்வலி கூறுவார்க்கே
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்
-- கம்பர்
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்
-- கம்பர்
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
புத்திர் பலம் யஸோ தைர்யம்
நிர்ப்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மராணத் பவேத் !!
Image Courtesy: http://bitssandpieces.blogspot.in/2009/04/sri-rama-navami.html
Content Courtesy: V.S.K. Graphics, No.3 Veerabhadran Street, Nungambakkam, Chennai